சூர்யா படத்தை தொடர்ந்து ஒடிடிக்கு வரும் மற்றொரு பிரபல நடிகர் படம் ..

கொரோனா ஊரடங்கால் திரையுலகம் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. பல கோடிகள் கொட்டி செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் முடங்கி இருக்கின்றன. கடந்த 6 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய முடியவில்லை. விஜய் நடித்த மாஸ்டர், சூர்யா நடித்த சூரரைப் போற்று, தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம், ஜெயம் ரவி நடித்த பூமி உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன.

செப்டம்பரில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு விடும் படங்கள் ரிலீஸ் செய்யலாம் என எண்ணினர். ஆனால் அரசிடமிருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை. வட்டிக்கு வாங்கி படம் தயாரிப்பதால் அதற்கு வட்டி கட்டமுடியாமல் தயாரிப்பாளர்கள் திணறினார். விரக்தி அடைந்த தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஒடிடியில் ரிலீஸ் செய்யத் தொடங்கினர்.

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி நடித்த டேனி போன்ற சில படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகின. தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த சூர்யாவின் சூரரைப் போற்று படமும் வரும் அக்டோபர் மாதம் ஒடிடியில் ரிலீஸ் ஆகிறது.நடிகர் ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகி இருக்கிறது பூமி. இந்த படம் ஒடிடி ரிலீஸுக்கு அடுத்த பெரிய ஹீரோவின் படமாக இருக்கும் என்று தெரிகிறது. பூமி படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி தயாரிப்பு தரப்பு உறுதி செய்யவில்லை.

ஜெயம் ரவி தற்போது அகமது இயக்கும் ஜன கன மன படத்தில் நடிக்கிறார். இதில் ஹீரோயின் டாப்ஸி. தவிர. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கிறார் ஜெயம் ரவி. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின் காகுமனு, த்ரிஷா, விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

More News >>