இறந்த தீவிர ரசிகையின் பெற்றோரை பார்க்க துடிக்கும் பிக்பாஸ் நடிகை..

முதல் சீசனில் பிக் பாஸ் தமிழில் தோன்றியவர் நடிகை ஓவியா. பலரின் அன்பைப் பெற்றார். பிக்பாஸ் ஷோவில் ஓவியா காட்டிய நேர்மை அவருக்கு ஓவியா ஆர்மி என்ற ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது. மேலும் நடிகையும் தனது ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்டு அவர்களுக்குத் தகுந்த மரியாதை அளித்து வருகிறார்.சில தினங்களுக்கு முன் ஓவியாவின் தீவிர ரசிகை ஒருவரான சான்வி என்பவர் காலமானார். இறப்பதற்குள் ஒருமுறை உங்களைப் பார்க்க வேண்டும் என்று அந்த ரசிகர் ஒருமுறை ஓவியாவுக்கு மெசேஜ் அனுப்பியவர் என்று ஓவியாவுக்குத் தகவல் வந்தது. இதையறிந்து பதற்றமடைந்த ஓவியா. சிறுமியின் பெற்றோரைச் சந்திக்க விரும்புவதாக பதிலளித்தார்.

அவர் கூறும்போது, "இது மிகவும் எதிர்பாராத இழப்பு. இதைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். தயவு செய்து சான்வியின் பெற்றோரை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று எனக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்கள் எங்கிருந்தாலும் நான் சந்திக்க வேண்டும். சான்வியின் ஆன்மா சந்தி அடையப் பிரார்த்தனை செய்கிறேன் .." என களவாணி நடிகை ஓவியா பதில் அளித்தார்.ரசிகரின் மறைவை அறிந்து அவருக்காக வருந்தியதுடன் அவர்களின் பெற்றோரை சந்திக்க எண்ணும் ஓவியாவின் விருப்பம் அவரது ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.

நீங்கள் மிகவும் இனிமையானவர். உங்கள் ரசிகர்களை நீங்கள் மிகவும் கவனித்துக் கொள்கிறீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்" என்று ஓவியாவுக்கு ரசிகர்கள் ட்வீட் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ஓவியா இப்போது இறந்த ரசிகையின் பெற்றோருடன் பேசவும், தனிப்பட்ட முறையில் தனது இரங்கலை தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

More News >>