விஜய்யிடம் எஸ்பிபி பாடிய பாடலை பாட கேட்டு நச்சரித்த பிக் பாஸ் நடிகை..

பிரபல பாடகர் எஸ்பிபி.பாலசுப்ரமணியம் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். சிகிச்சை தொடங்கிய ஒரு சில நாட்களில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது தீவிர சிகிச்சைக்குப் பிறகு எஸ்பிபி உடல்நிலை தேறி வந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (25ம் தேதி) சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார். எஸ்பிபி உடல் செங்குன்றம் தாமரை பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான நட்சத் திரங்கள் டிவிட்டர் மற்றும் வீடியோவில் தங்கள் இரங்கலைத் தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் பண்ணை இல்லத்துக்கு நேரில் வந்து எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் பிக்பாஸ் நடிகை வனிதா தனது பழைய நினைவு ஒன்றைப் பகிர்ந்துக் கொண்டார். அதில்,இன்னும் கூட எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. விஜய்யுடன் நடித்தபோது பலமுறை நான் எஸ்பிபி சார் பாடிய மலரே மவுனமா பாடலை பாடச் சொல்லிக் கேட்பேன். அவர் என்னை என்ன கிண்டலா என்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் எனக்காக அந்த பாடலை பாடும்படி கேட்பேன். அவரும் பாடுவார். அந்த நினைவு எஸ்பிபி சார் மரணம் என்று கேள்விப்பட்டதும் எனக்கு வந்து விட்டது.

எஸ்பிபி பாடிய அந்த பாடலும் அதே பாடலை விஜய்யிடம் பாடச் சொல்லிக் கேட்டதும் தான் இப்போது அடிக்கடி எனக்கு ஞாபகத்தில் வந்து செல்கிறது என்றார்.வனிதா தனது முதல் படமான சந்திரலேகா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை வனிதா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர், சமீபத்தில் தனது 3வது திருமணத்தின்போது தன்னை விமர்சித்த நடிகைகளுடன் மோதலில் ஈடுபட்டு போலீஸ் வரை புகார் சென்றது.

More News >>