வதோதராவில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி...

வதோதராவில் நேற்று நள்ளிரவு புதிதாகக் கட்டப்படும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.குஜராத் மாநிலம் வதோதரா நகரில் பவமன்புராவில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இங்கு நேற்று நள்ளிரவு திடீரென மேல் தளம் இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து முழு கட்டிடமும் இடிந்தது. கட்டிடத்தில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள் அங்கே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்த தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தீயணைப்பு படையினரும் வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதில் 3 பேரின் சடலங்கள் எடுக்கப்பட்டன.

மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெறுகிறது.

More News >>