பெண்களை கொலை செய்து உடலை கடித்து குதறும் சைக்கோ கொலையாளி!

பெண்களை கொலை செய்து உடலை கடித்துக் குதறி நாசப்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த சைக்கோ கொலையாளியை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 25ம் தேதி ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரியை அடுத்த வி.கே.ஆர்.புரம் கிராமத்தில் தனியாக வசித்துவந்த ரத்தினம்மாள் என்ற மூதாட்டி தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு அவரது வீட்டிலேயே பிணமாக கிடந்தார். மேலும், ரத்தினம்மாளின் உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்லால் கடித்த காயங்கள் இருந்தன.

இதே போல் கடந்த 9ஆம் தேதி சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் தனியாக இருந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். அவரது உடலிலும் பல இடங்களில் பல்லால் கடித்த காயங்கள் இருந்தன.

இதனைக் கண்ட ஆந்திர காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு பேரின் உடலில் பல்லால் கடித்த காயங்கள் இருந்தால் போலீஸார் சந்தேகமடந்தனர். மேலும், வெள்ளையம்மாள் கொலை செய்யப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட கைரேகை வேலூர், வாலாஜாபாத்தை அடுத்த மாதாங்கல் கிராமத்தை சேர்ந்த முனுசாமியின் கைரேகையுடன் ஒத்துப்போனது.

இதனையடுத்து முனுசாமியை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த முனுசாமியை, வாலாஜாபாத்தில் வைத்து, சித்தூர் போலீசார் கைது செய்தனர். முனுசாமி இதுவரை 7 கொலை, நான்கு கொலை முயற்சிகள், 30 க்கும் மேற்பட்ட வழிப்பறிகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், 2001 ஆண்டு ஒரு கொலை, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>