முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே நடராஜன் உடல் அடக்கம்!

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே அடக்கம் செய்யப்பட்டது.

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியருமான ம.நடரான், கடந்த பல மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இவரது உடலை நேற்று காலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பின்னர், தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் நடராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ம.நடராஜனின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து 15 நாட்கள் பரோலில் தஞ்சை மாவட்டத்திற்கு வந்தடைந்தார்.

அஞ்சலி முடிந்ததும் இன்று மாலை 4 மணியளவில் தஞ்சையில் உள்ள வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. நடராஜன் உடல், அவரது சொந்த ஊரான விளார் கிராமத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>