கொரோனா பாதிக்கப்பட்ட விஜயகாந்த், பிரேமலதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பூரணகுணம் அடைந்து இன்று(அக்.2) டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கடந்த மாதம் 23ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் நலமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.இதன்பின், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.இந்நிலையில், இருவருமே குணம் அடைந்து விட்டதால், மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருவரும் நல்ல ஒத்துழைப்பு அளித்ததால், சிகிச்சையில் குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள் என்று மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More News >>