பாயல் கோஷ் பாலியல் புகாருடன் ஒப்பிடாதீர்கள் சீண்டினால் நடப்பதே வேறு.. பிரபல நடிகருக்கு எச்சரிக்கை விடுத்த ஹீரோயின்.

தேரோடும் வீதியிலே படத்தில் நடித்தவர் இந்தி நடிகை பாயல் கோஷ். அதே போல் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர்கள் இருவருமே வெவ்வேறு கால கட்டத்தில் இரண்டு நடிகர்கள் மீது பாலியல் புகார் கொடுத்தனர். கடந்த ஆண்டு மீடூ இயக்கத்தில் இணைந்த தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தந்தார். நானா படேகர் இந்தியில் மட்டுமல்லாமல் தமிழில் பொம்மலாட்டம், காலா ஆகிய படங்களில் நடித்தவர். 10 வருடங்களுக்கு முன்பு இந்தி படத்தில் நானா படேகருடான் நடித்தபோது எனக்கு பாலியல் தொந்தரவு தந்தார் என்றார் தனுஸ்ரீ. கடந்த இரண்டு வாரத்துக்கு முன் நடிகை பாயல் கோஷ் பிரபல இந்தி பட இயக்குனர், தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த அனுராக் காஷ்யப் தன்னை தனது வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரை தள்ளிவிட்டு தப்பி வந்தேன் ஏன்று கூறியதுடன் அவர் மீது மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.பாயல்கோஷ் புகாரும் தனிஸ்ரீ தத்தா கொடுத்த புகாரும் ஒன்றுபோலத்தான் என ஒப்பிட்டு கூறிவருவதுடன் மீடியாக்களிலும் அதுபோல் எழுதப்படுகிறது. அதைக்கண்டு கோபம் அடைந்த தனுஸ்ரீ தத்தா என் புகாரையும் பாயல் புகாரையும் ஒப்பிடதீர்கள் என்று கூறி உள்ளார்.

அவர் கூறி இருபதாவது:சில பாலிவுட் பத்திரிகையாளர்கள் மற்றும் டிவிட்டர் டிராலர்கள், பாயல் கோஷ் வழக்கை எனது வழக்கோடு ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கின்றனர், இது மிகப்பெரிய பாலிவுட் புள்ளியான நானா படேகருக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்து ஒரு விடுவிப்பை கொடுக்கிறது. முதலாவதாக, அவர் மீது சட்டரீதியான துன்புறுத்தல் வழக்கை மூடிமறைக்க சட்டம் மற்றும் ஒழுங்கு இயந்திரங்களை பயன் படுத்தினார், மேலும் சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளின் சுமைகளை மீறி, இப்போது இந்த விஷயத்தின் உண்மைகளைத் திசை திருப்பும் போக்காக இது இருக்கிறது. பாயல் கோஷ் வழக்கில் நான் எல்லோரையும் போலவே குழப்ப மடைந்துள்ளதால் கருத்து தெரிவிக்க வில்லை. ஆனால், எனக்கு நடந்த துன்புறுத்தல் சம்பவம் பாலிவுட் வரலாற்றில் ஒரு பெரிய கறுப்புப் பாய்ச்சலாகும், எனக்கு நீதி வழங்கப்படாமலும், எனது நடிப்பு வாழ்க்கை மீண்டு வராமலும் இருக்கிறது. நானா படேகர் மீது நான் குற்றச்சாட்டு சொன்னதத்திற்காக நான் கொடுமைப் படுத்தப்பட்டேன், துன்புறுத்தப்பட்டேன், எனது காரும், என் பெற்றோரும் படேகர் அனுப்பிய கூலி குண்டர்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக நான் கடுமையான மனச்சோர்வுக்கு ஆளானேன், என் வாழ்க்கையை முடித்துக்கொள்வது பற்றி அடிக்கடி நினைத்தேன். நான் ஆன்மீகத்தில் மனதை திருப்பினேன். அதன்பிறகு மனதை மாற்றி வாழத் தேர்ந்தெடுத்தேன், ஆனால் மன்னிக்கவும் மறக்கவும் நான் தயாராக இல்லை.

வாழ்க்கையில் எந்த ஆதரவும் இல்லாத ஒற்றைப் பெண்ணாக இருப்பதால் வாழ்க்கையில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். நான் இப்போது வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கிறேன், இழந்த உடல்நிலையை மீண்டும் பெறுகிறேன், மீண்டும் என் வாழ்க்கையில் கவனம் செலுத்துகிறேன், இவை அனைத்தும் நான் அனுபவித்த மன அழுத்தம் மற்றும் அழுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டவை ஆகும். ஆனால் நான் இதுபோன்று செயல்களால் நான் சீண்டப்பட்டால் மீண்டும் வழக்கை கையில் எடுக்க தயங்கமாட்டேன். இவ்வாறு கோபமாக கூறினார் தனுஸ்ரீ தத்தா.

More News >>