சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் அதிசய காட்சி

அரிஞ்சிகை ஈஸ்வரன் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு தொடங்கி உள்ளது.

மேல்பாடி அருகே பொன்னை ஆற்றின் மேற்கு கரையில் சோமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. சோழ மன்னரால் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இந்த கோவில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது. ராஜராஜசோழனின் தாய்வழப்பாட்டனார் அரூர் துஞ்சியதேவன் என்பவர் கி.பி.1014ல் நடைபெற்ற ஒரு போரில் வீரமரணமடைந்தார். அவரின் நினைவாக சோமநாத ஈஸ்வரர் கோவிலின் எதிர் திசையில் அரிஞ்சிகை ஈஸ்வரன் கோவில் கட்டப்பட்டது.

பழமையான இந்த அரிஞ்சிகை ஈஸ்வரன் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஆண்டு தோறும் 2 முறை சூரிய ஒளி விழுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலும், செப்டம்பர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

இந்த அதிசய நிகழ்வு நேற்று காலை 6.32 மணி முதல் 6.50 வரை சூரிய ஒளி வாசல் வழியாக வந்து லிங்கத்தின் மீது விழுந்தது. இந்த அபூர்வ காட்சியை காண பல்வேறு இடங்களில் இருந்து திரண்டு பக்தர்கள் கூடினர். இந்த அதிசய நிகழ்வு வரும் 24ம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>