கடத்திச் சென்று கல்யாணம் செய்யவில்லை... காதலித்து தான் செய்தேன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விளக்கம்...!

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ இளம் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபு வாட்ஸ்அப் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி தனி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர். இவர் தியாகத்தை சேர்ந்த கோவில் அர்ச்சகர் சுவாமிநாதன் என்பவரது மகள் சௌந்தர்யாவின் நேற்று திருமணம் செய்துகொண்டார் தனது திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.

இதையறிந்த சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் எம்எல்ஏவின் வீட்டிற்கு வந்து தீக்குளிக்க முயன்றார்அங்கிருந்த சிலரால் அவர் காப்பாற்றப்பட்டு போலீசுக்குத் தகவல் கொடுத்து விட்டதாகச் சுவாமிநாதன் புகார் அளித்துள்ளார்.இதனிடையே நான் சௌந்தர்யாவைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ளவில்லை காதலித்துத் தான் திருமணம் செய்து கொண்டேன் என்று எம்எல்ஏ தனது மனைவியுடன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

More News >>