ஷாக் என்ட்ரி கொடுத்த சிம்பு...வியந்துபோன விஷால்!

நடிகர் சிம்புவின் திடீர் பிரவேசமும் தயாரிப்பாளர் சங்கத்துக்காக அவர் அளித்த யோசனைகளும் நடிகர் விஷாலை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல், தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் என அனைத்திலும் முட்டல் மோதலுடன் எதிரெதிர் துருவங்களில் இருந்தவர்கள் நடிகர் சிம்புவும் நடிகர் விஷாலும். ஆநால், சமீபத்தியத் தகவல் இந்த முரணை உடைத்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது.

இதில் இயக்குநர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை உடைய நடிகர் சிம்புவும் பங்குகொண்டு தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். முக்கிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் நடிகர் சிம்பு, "திரைப்பட சங்கத்தில் உள்ள ஊழலை முதலில் நாம் ஒழிக்க வேண்டும். தற்போது நடக்கும் ஸ்ட்ரைக் மூலம் சினிமா துறைக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் துறையில் முதலீடு செய்பவர்களின் பணம் கறுப்புப் பணமாக இருக்கக் கூடாது. தனது பணம் எந்தளவில் ஓடுகிறது, எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்தெல்லாம் ஒவ்வொரு நடிகனுக்கும் தெரிந்திருக்க வேண்டும்" என்றார்.

சிம்புவின் திடீர் வருகையே ஷாக் கொடுத்த நிலையில் அவரது அறிவுரைகள் பல வரவேற்கத்தக்கதாக இருந்ததாக தாயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>