இந்தியா வருகிறார் டர்ன்கிரிக் புகழ் கிறிஸ்டோஃபர் நோலன்!

பிரபல் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் விரைவில் இந்தியா வரவுள்ளார்.

ஹாலிவுட் திரை உலகில் சமீபத்திய ஹிட் ஆஸ்கர் படமான 'டர்ன்கிரிக்' உள்பட பாலோயிங்', 'மெனாண்டோ', 'பிரஸ்டீஜ்', 'இன்செப்ஷன்', 'பேட்மேன் ட்ரையாலாஜி', 'இன்டர்ஸ்டெல்லர்' எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன்.

மும்பையில் வருகிற மார்ச் 30-ம் தேதி டெக்னாலஜி இல்லாமல் இன்றைய காலகட்டத்திலும் பிலிம் ரோல்களில் படம்பிடிப்பது குறித்த கருத்தரங்கம் ஒன்று நடைபெற உள்ளது. இத்ல் இந்தியாவின் சிறந்த திரை நடசத்திரங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். அமிதாப் பச்சன், மணிரத்னம், கமல்ஹாசன், சந்தோஷ் சிவன், எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிகழ்வு குறித்து அறிந்துகொண்ட ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் தாநே முன்வந்து இதில் பங்கேற்று கலந்துரையாட விருப்பம் தெரிவித்துள்ளார். உலகளவில் டெக்னாலஜி மயம் விண்ணைத்தாண்டி பயணிக்கும் காலத்தில் இன்னமும் பிலிம் ரோல்களில் படம் எடுக்கும் ஆஸ்கர் நாயகன்தான் நோலன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>