அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு திடீர் மாரடைப்பு

அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு நேற்று நள்ளிரவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மயங்கி விழுந்த அவரை உடனடியாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த டாக்டர்கள் உடனடியாக இருதய அடைப்புக்கான ஆஞ்சியோ சிகிச்சையை அளித்தனர்.

அங்கு, முக்கியப் பிரமுகர்களுக்கான வார்டு அறையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>