இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை தாண்டியது..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 75 லட்சத்தைத் தாண்டியுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது வரை மூன்றரை கோடி பேருக்கு நோய் பாதித்த நிலையில், 10 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

நோய் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியா, 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அமெரிக்காவில் 75 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்த நிலையில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பிரேசிலில் 50 லட்சம் பேருக்கு மேல் தொற்று பாதித்த நிலையில், ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகப் புதிதாகப் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 55,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 75 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது வரை 75 லட்சத்து 50,273 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. இவர்களில் 66 லட்சத்து 63,608 பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 7 லட்சத்து 72,055 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனாவுக்கு நேற்று மட்டும் 579 பேர் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து, கொரோனாவல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14,610 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 8 லட்சத்து 59,786 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இது வரை 9 கோடியே 50 லட்சத்து 83,986 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

More News >>