பணம் வராததால் ஆத்திரம் : ஏடிஎம் இயந்திரத்தை எட்டி உதைத்த வாலிபர்.

காரைக்குடியில் ஏடிஎம்ல் பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம்க்கு உதை விட்டதில் தகரம் பெயர்ந்து விழுந்தது. காரைக்குடி கழனிவாசல் திருச்சி ரோடு பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் மில் கடந்த 6 மாதமாக பணம் வைக்கப்படுவதில்லை. அதேசமயம் அந்த மையம் பூட்டப் படாமல் திறந்திருந்ததால் வாடிக்கையாளர்கள் பலர் வந்து பணம் எடுக்க முயன்று ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில் நேற்றிரவு இதே போன்று பணம் எடுக்க வந்த ஒரு நபர் பணம் இல்லாத கோபத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கடுமையாக எட்டி உதைத்து இருக்கிறார். இந்த அழுத்தம் காரணமாக ஏடிஎம் இயந்திரத்தின் பின்னால் இருந்த மூடி பெயர்ந்து விழுந்துவிட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவும் பழுது என்றும், கடந்த 6 மாதமாகவே அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைப்பதில்லை என்றும் வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதன் பின் நன்கு வளர்ந்த ஏடிஎம் எந்திரத்தில் பின்பக்க மூடி சரி செய்யப்பட்டு மீண்டும் பொருத்தப் பட்டது. ஏடிஎம் இயந்திரத்தை எட்டி உதைத்த நபர் யாரென்று இதுவரை தெரியவில்லை.

More News >>