இந்தியாவின் சிறந்த பிராண்ட் ...டாடா கன்ஸல்டன்சியை முந்தியது ரிலையன்ஸ்

இந்தியாவின் சிறந்த பிராண்ட் வேல்யூ உள்ள நிறுவனங்களில் ரிலையன்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை, முதலிடத்தில் இருந்த டாடா கன்சல்ட்டன்சி நிறுவனம் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன், டாடா கன்சல்டன்சி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்தது. தற்போது ரிலையன்ஸ் நிறுவனம்,ரூ 4,66,599 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. டாடா கன்ஸல்ட்டன்சி நிறுவனம் 1,450 கோடி குறைவாக 4,65,159 கோடி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. அதுபோல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.13 சதவிகிதம் உயர்ந்து ரூ. 1,435க்கு உள்ளது. டாடா கன்ஸல்டன்சியின் பங்கு மதிப்பு 1.47 சதவிகிதம் குறைந்து ரூ. 2,360 விலையானது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் டாடா கன்ஸல்டன்சி நிறுவனம் நான்கு வருடங்களுக்குப் பிறகு முதலிடத்தைப் பிடித்திருந்தது. இரண்டே மாதத்தில் அதனை இழக்கவும் செய்துள்ளது.

More News >>