தொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை! சவரனுக்கு 1544 குறைந்தது! இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020

பங்குச்சந்தை கடந்த வாரத்தின் இறுதியில் படு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கத்தின் விலை படு வீழ்ச்சி அடைந்து 37000 தொட்டது. அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று சற்று ஏற்றத்துடன் முடிந்தது. ஆனால் இன்று காலையில் இருந்து தங்கத்தின் விலை படு வீழ்ச்சியை அடைந்துள்ளது.இது வெகுஜன மக்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின் தாக்கம் உலக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதே இதற்குக் காரணமாக இருக்கம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோபிடன் அவர்கள் மீண்டும் பழைய அமெரிக்காவை மீட்டெடுப்போம் என்று கூறியது உலக மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வட்டிக்கு வட்டி மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு போன்றவை இந்த விலை குறைவுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ‌.1544 குறைந்துள்ளது. எனவே ஆபரணத்தங்கத்தின் மதிப்பு நேற்று ஒரு கிராம் விலை ரூ.4709 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.39 விலை குறைந்துள்ளது, எனவே ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4670க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -46708 கிராம் ( 1 சவரன் ) - 37360

தூய தங்கத்தின் விலையும் கடந்த வாரத்தின் முதலே ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5084 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.39 விலை குறைந்து, கிராமானது ரூ‌.5045 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 50458 கிராம் - 40360

வெள்ளியின் விலை

ஒருபுறம் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையும்போது, மறுபுறம் வெள்ளியின் விலையானது உயரத்தொடங்கியுள்ளது. ஆனால் நேற்றைய விலையில் கிராமிற்கு 69 பைசா குறைந்து, கிராம் 66.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 66100 க்கு விற்பனையாகிறது.

More News >>