விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் ரூ.33 லட்சம் நகை பணம் கொள்ளை

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லாக்கர்களை உடைத்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை நேற்று காலை வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது. அப்போது, ஊழியர்கள் சிலர் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது வங்கியின் சுவரில் துளையிடப்பட்டு, லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுபற்றி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களுடன் உடனடியாக வந்த போலீசார் ஆய்வு செய்தனர். பல்வேறு கோணங்களில் விசாரணையும் நடத்தினர். இதில், வங்கியில் இரண்டு லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்து 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காண சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>