இப்போது நான் அவரை விரும்புகிறேன் ஏனென்றால்... - ஷமியின் மனைவி உருக்கம்

தற்போது அவருக்காக நான் வருந்துவும் செய்கிறேன்; விரும்பவும் செய்கிறேன்.. ஏனென்றால், அவர் எனத் கணவர் என்று முஹமது ஷமி அவர்களின் மனைவி ஹசின் ஜகான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், தனது முகநூல் பக்கத்தில் ஷமி பல பெண்களுடன் தகாத முறையில் தொடர்பு வைத்துள்ளதாக கூறி, அந்தரங்க விஷயங்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் சாட் விவரங்களை கசியவிட்டார்.

மேலும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஹசின் ஜகான் அளித்துள்ள பேட்டியில், ஷமியின் இந்த கீழ்த்தரமான போக்கை தட்டிக் கேட்டதற்காக குடும்பத்தினர்களுடன் இணைந்து ஷமி தன் னை துன்புறுத்துவதாகவும், கொலை முயற்சி கூட நடந்ததாகவும் கூறினார்.

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த முஹமது ஷமி, எனது புகழை கெடுக்க மிகப்பெரிய சதி நடக்கிறது. என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், எனது திறமையை சீர்குலைக்கும் முயற்சியில் விரோதிகள் களமிறங்கியுள்ளனர் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அலி‌ஷபா என்ற பெண்ணிடம் பலமுறை பணம் வாங்கியுள்ளார். ஆனால் இந்த பணம் குறித்து கேள்வி கேட்கும் போதெல்லாம் பதில் கூறாமல் மழுப்பி விடுகிறார் என ஷமியின் மனைவி ஹசின் ஜகான் புதிய தகவலை வெளியிட்டார்.

இந்நிலையில்,, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி நேற்று டேராடூனில் இருந்து டெல்லிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது. இதில், ஷமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஷமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஷமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள ஷமியின் மனைவி ஹசின் ஜகான், “என்னுடை போராட்டம் எல்லாம் அவர் என்ன செய்தார் என்பது பற்றியது தான். ஆனால், அவரை நான் உடல் ரீதியாக துன்புறுத்த விரும்பவில்லை என்பது தான். அவரது மனைவியாக அவருக்காக எதையும் செய்ய விரும்ப மாட்டார். ஆனால், தற்போது அவருக்காக நான் வருந்துவும் செய்கிறேன்; விரும்பவும் செய்கிறேன்.. ஏனென்றால், அவர் எனத் கணவர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>