பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..

பன்னீர் டிக்கா சமீபத்தில் பிரபலமான உணவாக திகழ்ந்து வருகிறது. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. பன்னீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் நாம் சாப்பிடும் உணவு வகையில் பன்னீரை சேர்த்து கொள்வது நல்லது என்று உணவு சுகாதாரத்துறை ஆய்வர்கள் கூறிவருகின்றனர். பன்னீரில் ஏகப்பட்ட வகைகளை செய்யலாம். அந்த வகையில் நாம் இப்பொழுது பன்னீர் டிக்காவை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:-

மேரினேட் செய்ய...கெட்டித்தயிர் - 1/2 கப்மஞ்சள் தூள் -1 ஸ்பூன் தனியாத்தூள் -1 ஸ்பூன் கரம் மசாலாத்தூள் -1 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி -சிறிதளவு சாட் மசாலாத்தூள் - 1/2 ஸ்பூன்எண்ணெய்-தேவையான அளவு மிளகாய்த்தூள் -தேவையான அளவுஇஞ்சி பூண்டு விழுது தேவையான அளவுகடுகு எண்ணெய் - 1 ஸ்பூன்சீரகத்தூள் -1 ஸ்பூன் ஓமம் - 1/4 ஸ்பூன்லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்கடலை மாவு - 2 ஸ்பூன்வெண்ணெய் - 2 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு வெங்காயம் -2குடைமிளகாய் - 1/2 துண்டு

டிக்கா செய்ய பன்னீர் - 250 கிராம்எண்ணெய் - 1 ஸ்பூன்வுட்டன் ஸ்க்யூவர் - 3கரித்துண்டு - 1நெய் - 1/2 ஸ்பூன்எண்ணெய் - 5 ஸ்பூன்

செய்முறை:-

முதலில் பன்னீர், வெங்காயம், குடைமிளகாயை போன்றவையை தேவையான அளவில் நறுக்கி கொள்ளவும். ஒரு பக்கம் வுட்டன் ஸ்க்யூவரை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

பிறகு ஒரு கடாயை எடுத்து அதில் வெண்ணெய், ஓமம், கடலை மாவு ஆகியவை சேர்த்து கிளறி கொள்ளவும். பின்னர் இந்த கலவையில் தயிர் சேர்த்து மேரினேட் செய்ய தேவையான பொருள்களில் கொடுக்கபட்ட அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கொள்ளவும்.

கடைசியில் கடுகு எண்ணெயை சூடாக்கி அதில் ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலக்கும் படி கிளறி கொள்ளவும். இந்த கலவையில் நறுக்கி வைத்த பன்னீர் துண்டுகள், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும்.

அடுத்து ஸ்க்யூவரில் பன்னீர், வெங்காயம், குடைமிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாக சொருகி டிக்காக்களை ரெடி செய்து கொள்ளவும். தோசைக்கல் சூடான பிறகு அதில் டிக்காவை வைத்து வேக வைக்கவும். ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் கரி துண்டு மற்றும் நெய்யை ஊற்றி கொண்டு நடுவில் வைத்து கொள்ளவும். பிறகு டிக்காவை ஒரு மூடி போட்டு மூடவும்.

டிக்கா நன்றாக வேக திருப்பி திருப்பி போடவும். 15 நிமிடம் கழித்தால் சுவையான சூடான பன்னீர் டிக்கா ரெடி..

More News >>