தலைகீழாக மாறிய சென்னை அணி... காரணத்தை விளக்கும் லாரா!

நடப்பு ஐபிஎல் சீசனில், சென்னை அணி பிளே ஆப் சுற்றுகளுக்கு செல்ல முடியாமல் லீக் போட்டியுடன் வெளியேறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸின் ஐபிஎல் வரலாற்றில் இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டு. தோல்விக்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களும், கடுமையான கோபங்களும் வெளியாகி கொண்டிருக்கிறன்றன. இதற்கிடையே, சென்னை அணி தோல்வி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா பேசி இருக்கிறார்.

அதில், ``சென்னை அணியின் பிரச்சனைக்கு காரணம் அந்த அணியில் நீண்ட காலமாக இருக்கும் நிறைய வயதான, அனுபவ வீரர்கள் தான். இவர்களால் அணிக்குள் புதிய, இளம் வீரர்கள் வர முடியவில்லை. வெளிநாட்டு வீரர்கள் கூட வெகு ஆண்டுகளாக அந்த அணியிலேயே இருக்கிறார்கள். இது தான் இந்த சீசன் அவர்களுக்கு தலைகீழாக மாற காரணம். ஒவ்வொரு போட்டியின் முடிவில் சென்னை அணியின் செயல்பாடு கீழே சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

More News >>