காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி!

காதலனோடு சேர்ந்து கணவனை கொன்றுவிட்டு குடிபோதையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பாலப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், இவருடைய மனைவி மீனா. கடந்த 23ம் தேதி இரவு தமிழ் செல்வன் மரணமடைந்தார். குடிபோதையில் கீழே விழுந்த தமிழ் செல்வன் இறந்துவிட்டதாக அவரது மனைவி மீனா தெரிவித்தார்.

இதற்கிடையில் தமிழ்செல்வனின் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் மீனாவின் செல்போன் உரையாடல்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் மீனாவும் அவரது காதலரும் இணைந்து தமிழ்செல்வனை கொன்று நாடகமாடியது தெரியவந்தது.

இதன்பின், மீனாவின் செல்போன் பேச்சு பதிவுகளை ஆய்வு செய்த போது உண்மை வெளிச்சத்து வந்தது. அதில் மீனாவும் அவரது காதலரும் பேசியது அதிர்ச்சிகரமாக இருந்தது. சுரேஷ் உடன் தவறான தொடர்பில் இருந்த மீனா, தங்களின் உறவுக்கு இடைஞ்சலாக இருந்த தமிழ்செல்வனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி காரியத்தை கச்சிதமாக முடித்ததை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். இதனைத்தொடர்ந்து தமிழ்செல்வனின் உடலை தோண்டி எடுத்து காவல் துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர். இதனிடையே கொலை தொடர்பாக சுரேஷ் என்பவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>