தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் நடிகை நஸ்ரியா..

தமிழில் வெளியான நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. தனது அழகான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதில் சட்டென இடம்பிடித்தார்.

பின்னர் ஜெய் ஜோடியாக திருமணம் என்னும் நிக்கா துல்கர் சல்மான் ஜோடியாக வாயை மூடி பேசவும் ஆர்யா ஜோடியாக ராஜா ராணி, தனுஷ் ஜோடியாக நையாண்டி ஆகிய படங்கள் மூலம் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடிக்கும் நேரத்தில் மலையாள திரை உலகின் முன்னணி நடிகரான பஹத் பாஸிலை திருமணம் செய்து சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது இடைவேளைக்கு பிறகு பிருத்வி ராஜ், பார்வதி நடிக்கும் படத்தில் நஸ்ரியாவும் நடிக்க உள்ளதாகவும் அந்த படத்தினை பிரபல இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் அமல் நீரத் இயக்கும் "அயூபிண்டே புத்தகம்" என்ற புதிய படத்தில் பஹத் பாஸில் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தனது கணவருக்காக புதிய அவதாரமாக அந்த படத்தை நஸ்ரியா தயாரிக்கிறார் என்ற தகவல்கள் உலா வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>