காதலை ஏற்க மறுத்த மாணவி கழுத்தை அறுத்து கொலை.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜுவாக்காவில் உள்ள சுந்தரய்யா காலனியை சேர்ந்த வர் வரலட்சுமி. இண்டர்மிடியட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவரை அதே பகுதியை சேர்ந்த அகில் என்ற வாலிபர் காதலிப்பதாக கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் வரலட்சுமி அதனை நிராகரித்து வந்தார்.

வரலட்சுமியின் உற வினர் ஒருவருக்கு அங்குள்ள சாய்பாபா கோவிலில் நேற்று திருமணம் நடந்தது. இதில் பங்கேற்க வரலட்சுமி வந்திருப்பதை அறிந்து அகில் அங்கு சென்றார். வரலட்சுமி தனியாக இருக்கும்போது அங்கு வந்த அகில் அவரிடம் கோபமாக பேசி விட்டு கத்தியால் வரலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி விட்டார். இது குறித்த தகவல் அறிந்த காஜுவாக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக விசாகப்பட்டினம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அகிலை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.

More News >>