கணவனுக்காக கடன் சுமந்த தாய் குழந்தைகளுடன் தற்கொலை!

மன்னார்குடியில் கடன் தொல்லை காரணமாக விஷம் குடித்த தாய், மற்றும் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் தமிழரசி. இவரது கணவர் வெளிநாடு செல்வதற்காக சிலரிடம் கடன் பெற்றுள்ளார். இதனிடையே வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவரது கணவர் சிலமாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால், கணவர் பெற்ற கடனை தமிழரசி சுமந்து வந்தார்.

இந்நிலையில் கணவர் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் தமிழரசி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த தமிழரசி 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தமிழரசியையும் 2 குழந்தைகளையும் மீட்டு உறவினர்கள் தஞ்சை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடந்த சில நாட்களாக தஞ்சை அரசு மருத்துவமனையில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழரசி, மகன் ஷ்யாம் (11), மகள் மனிஷா (9) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>