நாளொன்றுக்கு 5 பிரியாணி சாப்பிட்ட ஹீரோ ஒல்லியான ரகசியம்..

கோலிவுட் நடிகர்கள் கமல்ஹாசன் தொடங்கி விக்ரம், சூர்யா போன்ற ஒரு சில நடிகர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்பதங்களது உடல் தோற்றத்தை குண்டாக அல்லது ஒலியாக, சிக்ஸ் பேக், அல்லது ஜிம் பாய் தோற்றங்களுக்கு மாற்றக்கூடியவர்கள் ஆளவந்தான் படத்துக்காக கமல்ஹாசன் பயங்கர வெயிட் போட்டு நடித்தார். அவரது புஜாங்களைபயில்வான்களைப் போல மாற்றினார். ஒருசிலர் அதற்காக அவர் ஊசிபடுத்தியதாக கூறினார்கள். ஆனால் அதை அவரது தரப்பு மறுத்தது. கடுமையான உடற்பயிற்சி அதிக உணவு சாப்பிட்டு வெயிட் போட்டதாக தெரிவித்தனர். அதேபோல் சூர்யா 7ம் அறிவு படத்துக்காக சிக்ஸ் பேக் தோற்றத்துக்கு மாறினார்.

ஐ படத்துக்காக ஆணழகன் போட்டியில் வரும் கட்டு மஸ்தான வீரர்களைபோல மாறினார் விக்ரம். இந்நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் தனது புதிய தோற்றத்தை வெளிப்படுத்தி ஆச்சரியதில் மூழ்கடித்திருக்கிறார். கடந்த கொரோனா காலத்துக்கு முந்தைய காலம்வரை சிம்புவின் தோற்றம் பெருத்திருந்தது. 100 கிலோவுக்கு மேல் வெயிட் போட்டிருந்தார். கடந்த ஒன்றரை வருடமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதயடுத்து 6 மாதமாக வீட்டில் இருந்தார் சிம்பு. அந்த காலத்தை அவர் தனது உடலை மெலிதாக்குவதற்கான கடுமையான பயிற்சி மேற்கொண்டார். உணவு கட்டுப்பாடும் கடைபிடித்தார். அதற்கு பலன் கிடைத்தது. 100 கிலோவிலிருந்து குறைந்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறினார்.

சிம்பு தனது உடலை குறைத்தது எப்படி என்று பலரும் கேட்டு வருகின்றனர். சிம்புவுக்கு பயிற்சி அளித்த உடற் பயிற்சியாளர், 'சிம்பு உணவு பிரியர். உணவு கட்டுப்பாடு மேற்கொள்ள வேண்டும் என்றபோது அது அவருக்கு சற்று கடினமாக இருந்தது. ஒரு நாளைக்கு 5 பிரியாணி சாப்பிடுவார். ஆனால் உடலை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பிரியாணியை மறக்கடித்தது. அதற்கு காரணம் அவரது மன உறுதி. அதுதான் அவரை இன்றைக்கு இவ்வளவு ஒல்லியாக்கி இருக்கிறது என்றார். சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

More News >>