கமல் கட்டளையிட்டால் தேர்தலில் நிற்கவும் தயார்: அதிர வைத்த சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து, கமல்ஹாசனின் கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் சினேகன், கமல் சொன்னால் கட்சியில் நிற்கவும் தயார் என கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, அதில் பங்கேற்ற அனைவரும் கமல்ஹாசனுடன் நெருங்கி பழி வருகின்றனர். குறிப்பாக சினேகனை சொல்லாம். கமல்ஹாசன் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திய அன்று மேடையில் பேசிய சினேகனின் உரை அனைவரையும் கவர்ந்தது. கமலுக்கு பெரும் ஆதரவு அளித்து வரும் சினேகன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார்.

அதில், “பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் மட்டும் அவரது கட்சியில் இணையவில்லை. அவருடைய கொள்கைகள் எனக்கு பிடித்திருந்தது. உலகளாவிய அவரது பார்வை என்னை கவர்ந்தது. சினிமாவில் பல புதுமைகளை நிகழ்த்திய கமல் கண்டிப்பாக, அரசியலிலும் நிகழ்த்துவார். மேலும், கட்டியில் ஒரு அடிமட்ட தொண்டனாகவே பணிபுரிய தனக்கு விருப்பம்.

அவர் கட்டளையிட்டால் தேர்தலில் நிற்கவும் செய்வேன். புதிதாக யார் கட்சி ஆரம்பித்தாலும் எனது ஆதரவு கடைசி வரை கமலுக்குத்தான்” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>