சனம் ஷெட்டி, பாலாஜியை எட்டி உதைத்ததால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு.. காரித்துப்பும் நெட்டிசன்கள்..

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் ஆதரவை சம்பாதித்து வருகிறது. இந்நிகழ்ச்சியை பத்மஸ்ரீ கமல்ஹாசன் பிரம்மாண்டமாக தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமை ஆண்டவர் வருகை தந்து தில்லாக அனைவரின் குறையை சுட்டி காட்டி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு சென்றார். அது மட்டும் இல்லாமல் சில பல நாரதர் வேலையையும் பிக் பாஸ் வீட்டில் கமல் இனிதே தொடங்கி வைத்தார்.

இதனின் விளைவாக நேற்று பிக் பாஸ் வீட்டில் பலருக்கும் சண்டை, கோவம் ஆகியவை எட்டி பார்த்தது. அதலில் முதல் ஆடாக மாட்டியது பாலாஜி. நேற்று இரவு இருவரும் கார்டனில் ஒருவரை ஒருவர் பிடிக்காது என்று எதிர் எதிரே சொல்லி கொண்டனர். இதனால் இனிமேல் பேசிக்கொள்ள வேண்டாம் என்று கார சாரமாக பேசி கொண்டனர். பிறகு சனம் விளையாட்டு தனமாய் பாலாஜியின் பின் புறத்தில் எட்டி உதைத்தார். அப்பொழுது சிரித்து கொண்டே சென்ற பாலா பிறகு இப்படி செய்வர் என்று சனம் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். விடிந்த பிறகு ஆஜீத் அவர்கள் பாட்டை சொல்லி கொடுத்து கொண்டு இருந்தார். அப்பொழுது பாலாஜி சனமை பார்த்து தருதலை என்று கூறினார்.

இதனால் கோவம் அடைந்த சனம் பாலாஜியை அவன்.. இவன்.. என்று சண்டை பிடிக்க தொடங்கினார். இதை அடுத்து பாலாஜி சனமை அடிக்காத குறைதான்.. அவரிடம் பாய்ந்து பாலாஜியும் சண்டை போட்டார். இதனால் வீடே ஒரு ரணகளம் ஆனது. இதனால் நெட்டிசன்கள் சனம் மற்றும் பாலாஜியை வெச்சி செய்து வருகின்றனர். சனம் எப்படி ஒரு ஆண்மகனை பின் புறத்தில் அடிக்கலாம் என்று சர்ச்சையை கிளப்பிவருகிறது.

More News >>