3 கல்யாணம்.. 15 நாளில் எஸ்கேப்.. லாக் டவுனால் தடம் மாறிய பெண்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த யோகேஷ் ஷிர்சாத் என்பவர் தன்னை ஒரு பெண் ன்னை திருமணம் செய்த 15 நாட்களில் ஏமாற்றிவிட்டு, உடைமைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக போலீசிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், ஔரங்காபாத்தைச் சேர்ந்த 27 வயதான விஜயா அம்ரூத் என்ற பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர். விசாரணையில், அம்ரூத்துக்கு ஏற்கனவே ஒரு திருமணமாகி ஒரு மகன் இருப்பதும், கொரோனா லாக் டவுனால் அம்ரூத்துக்கும், அவரின் கணவருக்கும் வேலை இல்லாமல் பொருளாதார ரீதியாக மிகுந்த பண கஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து, பண சிக்கலை சமாளிக்க ஒரு திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி, ஆண்களை திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி நகை மற்றும் உடைமைகளை கொள்ளை அடிப்பதே அந்த திட்டம். அந்த திட்டத்தின்படி, முதலில் ஷிர்சாத்தை திருமணம் செய்து 15 நாட்கள் அவருடன் வாழ்ந்துவிட்டு, நகை பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் அம்ரூத். அதன்பின் கர்ஜாத்தை சேர்ந்த சந்தீப் தராட், அதன்பிறகு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் என்று மூன்று பேரை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு 15 நாட்களில், அவர்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

More News >>