அரட்டல், உருட்டல் செய்யும் அமைச்சர்... ராஜேந்திர பாலாஜியை வறுத்தெடுத்த ஸ்டாலின்!

தமிழகம் மீட்போம் என்ற பெயரில் திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அதன்படி இன்று விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சார கூட்டம் ஆன்லைனில் நடந்தது. கூட்டத்தில் அதிமுகவை குறி வைத்து தாக்கினார் ஸ்டாலின். குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாபா பாண்டியராஜனை குறி வைத்து தாக்கினார். அதில், ``அரட்டல், உருட்டல் செய்யும் அமைச்சராகவே வலம் வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அதிமுகவில் பாஜக அணி என்று இருக்கிறது. இந்த அணியின் முக்கிய நபர்களாக ராஜேந்திர பாலாஜி மற்றும் மாபா பாண்டியராஜன் இருக்கின்றனர்.

ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது; ஒரு அமைச்சர் எப்படி இருக்கக் கூடாது; ஒரு மனிதர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக காட்ட வேண்டிய நபர் ராஜேந்திர பாலாஜி. எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, ஆளும்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே உயிருக்கு பயப்படக் கூடிய அளவுக்கு அராஜகம் கொடி கட்டிப் பறக்கும் மாவட்டமாக இந்த விருதுநகர் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் அரசுத் துறைகள் அதள பாதாளத்துக்கு போய்விட்டன. திமுகவின் வெற்றியை தடுக்க முயற்சி. ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசு என்பதே அ.தி.மு.க அரசின் அடையாளம்" எனக் கூறியுள்ளார்.

More News >>