தனியா வாங்க சொல்றேன்.. உளறிய எஸ்.ஏ.சியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

நடிகர் விஜய், நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் கட்சியை பதிவு செய்தார் எனத் தகவல் பரவியது. அந்த விண்ணப்பத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி பெயர் பொதுச்செயலாளராகவும், அவரின் அம்மா ஷோபா சந்திரசேகர் பொருளாளர் என்றும் போடப்பட்டிருந்தது. ஆனால் ``என் தந்தை அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன். தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் ரசிகர்கள் யாரும் இணைய வேண்டாம். அந்தக் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை" எனக் கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இதனால் தந்தைக்கும் மகனுக்கும் மோதல் இருப்பது உறுதியானது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கடந்த 5 ஆண்டு காலமாக நீங்களும் விஜய்யும் பேசிக் கொள்வதில்லை என்று சொல்கிறார்களே.. உண்மையா என்ற நிருபர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு, ``தனியாக வாங்க விளக்கம் சொல்றேன். மற்றவர்களின் கற்பனைக்கு எல்லாம் விளக்கம் சொல்ல முடியாது. கொரோனா காலகட்டத்தில் 2-3 முறை விஜய்யை பார்த்து பேசினேன்" என்று மழுப்பினார். தற்போது எஸ்.ஏ.சியின் ``தனியாவாங்கசொல்றேன்" என்பதையே நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்தியா டிரெண்டிங்கில் தற்போது #தனியாவாங்கசொல்றேன் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

More News >>