பிசிசிஐ கிரீன் சிக்னல்... ஆஸ்திரேலிய டூரில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத கோலி!

ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தப் போட்டிகளுக்கு இப்போது இருந்தே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதலில் ஒருநாள் போட்டிகள் துவங்கினாலும், டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதி துவங்குகிறது. மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா சர்மா - விராட் கோலி தம்பதிக்கு ஜனவரி மாத இறுதியில் முதல் குழந்தை பிறக்க இருக்கிறது. அந்த சமயத்தில் மனைவியின் அருகில் இருப்பதற்காக விராட் கோலி இந்தியா வரவிருகிக்கிறார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இதற்கான அனுமதியை விராட் கோலி பிசிசிஐயிடம் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

More News >>