தீய வட்டத்துக்குள் சிக்கியிருக்கும் விஜய்.. திடுக்கிடும் தகவல் வெளியிடும் தந்தை..

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் புதிதாக அரசியல் கட்சியொன்றை தேர்தல் தலைமை அலுவலகத்தில் பதிவு செய்தார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த விஜய், என் தந்தை தொடங்கி இருக்கும் கட்சி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரது கட்சியில் எனது ரசிகர்கள் யாரும் இணைவதோ அல்லது தேர்தல் பணியாற்றுவதோ கூடாது, மேலும் அக்கட்சியில் எனது பெயரையோ படத்தையோ பயன்படுத்தக்கூடாது என பகிரங்கமாக அறிவித்தார். கடந்த சில காலமாகவே அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று தந்தையிடம் கூறியும் அவர் அதுபற்றி பேசி வருவதால் விஜய் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசுவதில்லை என்று அவரது தாயார் ஷோபா சமீபத்தில் தெரிவித்தார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து எஸ்.ஏ.சந்திர சேகர் கூறிய தாவது: விஜய் ஒரு விஷ வட்டத்தில் சிக்கி இருக்கிறார். அவரைச் சுற்றியுள்ளவர்களில் சிலர் அவரது பிரபலத்தை தங்கள் சுயநலங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். உனது அப்பா எஸ்.ஏ.சி என்ன செய்கிறாரோ அது விஜய்க்கு எதிரானது என்ற உணர்வை உருவாக்க அவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது அவர்கள் விஜயை ஒரு இலக்காகக் கொண்டுள்ளனர். அதே அம்புகள் விஜய்க்கு எதிராகவும் ஒரு நாள் செல்லக்கூடும் என்பதை விஜய் உணர வேண்டும். நான் எப்போதும் ஒரு சமூக ஆர்வலராக இருந்து வருகிறேன், பிரச்சினைகள் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறுகிறேன். எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய்யின் அப்பா என அடையாளங்களுக்கிடையில் நான் சிக்கியுள்ளதால் நான் எது கூறினாலும் அது விஜய்யை சுற்றியதாகவே சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. விஜய் தனது அப்பாவாகவும், இயக்குனராகவும், சமூக உணர்வுள்ளவராகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆனால், பொது விஷயங்களில் நான் அமைதியாக இருக்க முடியாது. ஒரு இயக்குநராக தனது வாழ்க்கையை தியாகம் செய்தததுடன் ஒரு பியூன் மற்றும் மேலாளராக உழைத்திருக்கிறேன். அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன். ஏனெனில் விஜய்யின் ரசிகர்கள், விஜயைச் சுற்றியுள்ள கூட்டணியால் தொலைந்து விட்டதாக உணர்த்துகிறார்கள். அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து விஜய் தனக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை அவர் வரைவு செய்யவில்லை என்றும், ஆனால் அவர் அதை முறையாகச் செய்யாமல் கையெழுத்திட்டிருக்கிறார். விஜய் ஒரு இரும்புக் கோட்டையில் வைக்கப்பட்டு எனக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய்யின் தரப்பிலிருந்து அறிக்கையை எதிர்பார்த்தேன், எதிர்பார்த்தபடி அறிக்கை வந்தது. ஓரிரு ஆண்டுகளில், விஜய் எனது நடவடிக்கையின் செயல்பாடுகளை உணர்ந்து கொள்வார்.

விஜய்யின் பெயரை அரசியல் கட்சிக்கு ஏன் வைத்தீர்கள் என்கிறார்கள். விஜய்யின் அனுமதியின்றி, விஜய் என்ற சொல்லுக்கு மற்றொரு அர்த்தம் உள்ளது - வெற்றி, நான் இயக்கிய 70 படங்களில், 50 படங்களில், ஹீரோவின் பெயர் விஜய்தான். எனக்கும் மகனுக்கும் இடையில் எனது மனைவியும் விஜய்யின் தாயும் சிக்கியுள்ளார். நான் விஜய்யின் தந்தை அவருக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்ய மாட்டேன். எனது மகன் என்னிடம் திரும்பி வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். விஜய் தீய வட்டத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

More News >>