கோரிக்கை வேண்டாம் : தியேட்டர்களை திறக்கவிடுங்கள் அமைச்சர் வேண்டுகோள்

திரைப்பட வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் இப்போது கோரிக்கை வைக்கக்கூடாது. திரைப்படம் வெளியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டுக்கொண்டார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது :கொரோனா காலகட்டத்தில் 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்படுகிறது.

இந்த நேரத்தில் வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைப்பது சரியான ஒன்றல்ல. படங்களை வெளியிடுவதற்கு இரு தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். நாளைதிரையரங்குகள் திறக்கப்படுவதால் இருதரப்பும் பேசி சுமுக தீர்வு காணப்பட வேண்டும் அது இல்லாத பட்சத்தில் இன்னும் இரு தினங்களில் சென்னையில் தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து இருதரப்பினரையும் அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணப்படும்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பிடிபடும்போது தொடர்ந்து தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை மீட்டு வந்து இருக்கிறது அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை அழிக்க வேண்டுமென்ற என இலங்கை நீதிமன்றம் உத்தரவு குறித்தும் தமிழக அரசு மத்திய அரசு கவனத்திற்குக் கொண்டுசெல்லும் பாஜக தலைவர் வேல்முருகன் தமிழகத்தில் நாங்கள் கைகாட்டும் நபர் தான் அடுத்த முதல்வர் என்று சொல்லியிருக்கிறார்.அவர் தனது கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிச் சொல்லி வருகிறார்.யார் முதல்வர் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி தான் அமையும். எங்களின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என ஏற்கனவே அறிவித்து விட்டோம் என்றார்.

More News >>