மஞ்சக்காட்டு மைனா.. சின்னத்திரை நடிகை ஸ்வேதாவின் திருமணக் கொண்டாட்டம் ஆரம்பம்..

தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது தான் யாரடி நீ மோகினி.. இந்த சீரியலில் வித்தியாசமாக பேய் வருவதால் மக்களின் மனதை மிகவும் கவர்ந்து விட்டது என்றே கூறலாம். சைத்ரா ரெட்டி என்பவர் இந்த சீரியலில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு முன்பு கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் அறிமுகமாகி கதாநாயகியாக நடித்தார்.

இவரது அழகில் மயங்கிய இளைஞர்கள் இன்னும் எழுந்த பாடில்லை. இந்நிலையில் இவருக்கு திருமணம் என்ற செய்தி வெளியானவுடன் இளைஞர்கள் மிகுந்த மன வருத்தத்துடன் இருக்கிறார்கள். இவருக்கு பல ரசிகர்கள் கூட்டம் சோசியல் மீடியாவில் இயங்கி கொண்டிருக்கிறது. இவருக்கு ராக்கேஷ் என்பவருடன் சில நாட்களுக்கு முன்பு நிச்சயம் முடிந்தது. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொள்ளப்போகின்றனர். கொரோனா காலம் என்பதால் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என்று சிலர் மட்டுமே இவர்களது நிச்சயத்தில் கலந்து கொண்டனர்.

தற்பொழுது இவரது திருமணம் ஹைதராபாத்தில் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவரது திருமணத்தையொட்டி நலங்கு நிகழ்ச்சி இனிதே தொடங்கிவிட்டது. இவரது நலங்கு புகைப்படங்களை அவரது நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இவரது நலங்கு புகைப்படத்தில் மஞ்ச காட்டு மைனா போல் அழகில் ஜொலிக்கிறார். இது குறித்து ரசிகர்கள் சைத்துவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News >>