கருப்பன் குசும்புக்காரன்.. நடிகரின் பரிதாப நிலை

கேன்சர் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் நடிகர் தவசியின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது... இப்படி பொத்தாம் பொதுவாகச் சொன்னால் யாருக்கும் தெரியாது. அதே சமயம் 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற டயலாக்கை சொன்னால் தான் தமிழக மக்களுக்கு புரியும். தேனி மாவட்டம் கோணம்பட்டியை சேர்ந்தவர் குணச்சித்திர நடிகர் தவசி. 1990 முதல் திரைப்படத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். இதுவரை 147 படங்களில் இவர் நடித்திருக்கிறார். கிழக்கு சீமையிலே.. துவங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் இவருடைய நடிப்பு பரவலாக பேசப்பட்டது. மிகப் பெரிய மீசையுடன் கருப்பன் குசும்புக்காரன் என்ற இவரது டயலாக் பட்டி தொட்டியெல்லாம் பிரசித்தம்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக தவசிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்ட து. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவசி கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். புற்றுநோயின் காரணமாக முழுவதுமாக உடல் உருக்குலைந்து அடையாளமே தெரியாத நிலை யில்யில் தன்னை வாழ வைத்த திரையுலகத்தை சேர்ந்த நண்பர்கள் உதவியை தனக்கு உதவி வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டிருக்கிறார். மிகப் பெரிய மீசையுடன் ஆஜானுபாகுவாக இருந்த குணச்சித்திர நடிகர் தவசி உடல் மெலிந்து பார்ப்பவர்களை கண்ணீர் மல்க செய்கிறது.

இவரின் நிலைமையை மதுரையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பாலகிருஷ்ணன் இயக்குனர் சமுத்திரக்கனியிடம் எடுத்து சொல்லியிருக்கிறார். சமுத்திரகனியும் தவசி இடம் பேசி பேசி ஆறுதல் கூறி நிதி உதவியும் செய்திருக்கிறார். ஆனாலும் நிதி போதாததால் தனக்கு உதவி செய்யுமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தவசி.

More News >>