ldquoமுட்டாள்கள் தினம் மோடிக்கு உரியதுrdquo: ஜிக்னேஷ் மேவானி கடும் தாக்கு

முட்டாள்கள் தினம் இந்திய பிரதமர் மோடிக்காகவே கொண்டாடப்படுகிறது. இந்த தினம் மோடிக்கு உரியது என ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக தாக்கி உள்ளார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலில், சுயேச்சை வேட்பாளராக பாஜவுக்கு எதிராக களமிறங்கி தனது வெற்றியை நாட்டியவர் ஜிக்னேஷ் மேவானி. இவர், தொடர்ந்து பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், ஏப்ரல் 1ம் நாளான நேற்று உலகம் முழுவதும் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதைக் கொண்டு, மோடியை முட்டாள் என்று விமர்சித்து ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “நரேந்திர மோடி இந்த முட்டாள்கள் தினத்தை புதிய உயரமான இடத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இந்த நாள் குறிப்பாக அவருக்கானது. எங்களுடைய வாழ்த்துக்கள் எப்போதும் அவருக்கு இருக்கும்” என பதிவிட்டிருந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>