தென்னாப்பிரிக்காவில் காந்தி கொள்ளுப்பேரன் கொரோனாவால் மரணம்..

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா, கொரோனாவால் உயிரிழந்தார்.தேசப்பிதா மகாத்மா காந்தி, தனது இளவயதில் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றினார். அங்குள்ள மக்களுக்காக சமூகப் பணிகளையும் ஆற்றினார். மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தி தனது குடும்பத்தினருடன் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கினார்.

இந்நிலையில், காந்தியின் கொள்ளுப்பேரனும் மணிலால் வாரிசுமான சதீஷ் துபேலியா தனது 66வது வயதில் உயிரிழந்தார். கடந்த ஒரு மாதமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா பாதித்தது. தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவரது சகோதரி உமா துபேலியா தெரிவித்துள்ளார். சதீஷ் துபேலியா, ஊடகங்களில் புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர்.

More News >>