கருணை வேலைக்காக தந்தையை கொன்ற மகன்.. ஜார்கண்ட் அதிர்ச்சி!

ஜார்க்கண்ட்டின் ராம்கார் மாவட்டத்தின் பார்ககானா பகுதியில் உள்ள மத்திய நிலக்கரி புலங்கள் லிமிடெட்டில் தலைமை பாதுகாவலராக வேலை செய்துவந்தவர் கிருஷ்ணா ராம். 55 வயதான இவர் கடந்த வியாழக்கிழமை கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ், கிருஷ்ணா இறந்துகிடந்த இடத்தில் அவருடைய மொபைல் போனும், ஒரு சிறிய கத்தியும் இருந்ததைக் கண்டறிந்தனர். இதன்பின் நடந்த விசாரணையில் கிருஷ்ணாவை கொன்றது அவரின் மகன்தான் என்பது தெரியவந்தது.

கிருஷ்ணாவின் மூத்த மகன்தான் அவரை கொலை செய்துள்ளார். கிருஷ்ணாவின் பாதுகாவலர் வேலை மத்திய அரசு வேலை என்பதால் அதனை கருணை அடிப்படையில் பெற தன் தந்தையவே கொலை செய்துள்ளார். இந்தக் குற்றத்தை போலீஸிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News >>