நடிப்பு மட்டுமல்ல அந்த விஷயத்தை செய்யவும் எனக்கு ரொம்ப ஆசை என்ன சொல்கிறார் பிரபல நடிகை தெரியுமா?

சங்கத் தமிழன், இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்திலும் நடித்து வருகிறார் நடிகை ராஷி கன்னா . அவருக்கு இன்று பிறந்த தினம். ரசிகர்கள் திரையுலகினர் சமூகவலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர். ராஷி கன்னா கோலிவுட் மற்றும் டோலிவுட் திரைப்படங்களில் மாறி மாறி பிஸியாக நடித்து வருகிறார். டெல்லி அழகியான ராஷி கன்னா தனது திறமையை அவர் நடிப்பில் வெளிபடுத்துகிறார்.

அவர் கூறியதாவது: திரையில் ஒரு கிராமத்துப் பெண்ணாக நடிப்பது எனது கனவு. நான் வழக்கமான கதாபாத்திரங்களில் நடிப்பதையும் விரும்புகிறேன். எனது தொழிலின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் இருக்கிறேன். நடிப்பை நான் தீவிரமாக எடுத்துக் கொள்கிறேன். இந்த துறையில் நான் ஒரு சிறந்த நடிகையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.நான் வேடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது எதைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி ஆரம்பக் கட்டங்களில் புரிதல் இல்லாமல் இருந்தேன்.

பல ஆண்டுகளாக நான் கற்றுக் கொண்டதில் இப்போது தேர்வு செய்து நடிக்க கற்றுக் கொண்டேன். எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் நான் செய்த ஒரு படத்திற்கு நான் ஒரு முறை செட் வந்ததாக மட்டுமே உணர்ந்தேன் நடித்ததை என்னால் உணர முடியவில்லை. அதெல்லாம் எனக்குப் பாடமாக அமைந்தது.நான் இப்போது என் நடிப்பில் ஆர்வமாக உள்ளேன், ஆனால் அதில் மட்டுமல்ல இன்னொன்றிலும் எனக்கு நிறைய ஆசை. எதிர்காலத்தில், இசை விஷயத்தில் இன்னும் அதிகமாகச் செய்ய விரும்புகிறேன், பாடுவதைக் கூட விரும்புகிறேன். கொரோனா காலகட்டத்தில் கிதார் இசை கற்கத் தொடங்கி அதன் அடிப்படைகளை சரியாகக் கற்றுக்கொண்டேன்.

ஆனால் நான் இன்னும் ஒரு தொடக்க மாணவி மட்டும் தான். மனதளவில் நான் வலிமையானவள். உண்மையில் அதனால் தான் தொற்றுக்கள் என்னை அண்டுவதில்லை. நான் அவர்களுக்கு மோசமாக உணர்கிறேன். ஊரடங்கு காலகட்டம் என்பது எனக்கு மிகவும் அமைதியான நேரமாகும். ஆன்மீகத்தில் எனக்கு ஈடுபாடு அதிகம். அதனால் நான் நிறையத் தியானத்தில் ஈடுபட்டேன். மேலும் அதிகாலை 4 மணிக்கு எழும் வரிசையில் நானும் தற்போது இடம் பெற்றுவிட்டேன்.இவ்வாறு ராஷி கன்னா தெரிவித்தார்.

More News >>