மதுரையை அடுத்து திருச்சியில் இன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: கமல் ரயிலில் பயணம்

மதுரையை தொடர்ந்து இன்று திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை ரயிலில் பயணித்தார்.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்த பிறகு அதிரடி நடிவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்கிய கமல் அன்று மாலை மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். அதில், தனது கட்சியின் பெயர் மற்றும் கொடி சின்னம் குறித்தும் அறிவித்தார்.

இதன் பிறகு, தமிழகத்தில் அரங்கேறி வரும் பல்வேறு பிரச்னைகளுக்கும் அவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், மதுரையை தொடர்ந்து கட்சியின் இரண்டாவது பொது கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுவதாக கமல் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, பொதுகூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, கமல் நேற்று மாலை சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலில் புறப்பட்டார். அப்போது ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>