புயல் தகவல் கிடைக்கவில்லை : 1500 குமரி மீனவர்கள் கதி என்ன?

குமரி மாவட்டத்திலிருந்து 170 விசைப்படகுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 1500 மீனவர்களுக்கு புயல் தகவல் கிடைக்கவில்லை என்பதால் அவர்களது குடும்பத்தினர் பதட்டம் அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 170 படகுகளில் சுமார் ஆயிரத்து 500 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு குமரி கடல் பகுதியில் நாளை உருவாகும் புயல் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இது குறித்து அவர்களுக்கு தெரிவிக்க தொடர்பு கொண்டபோது அவர்கள் தகவல் தொடர்பு கிடைக்காத நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது இதைத்தொடர்ந்து மீனவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தகவல் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More News >>