அர்ஜுனமூர்த்தி எனது தந்தைக்கு ஆலோசகராக இருந்ததில்லை.. தயாநிதி மாறன் மறுப்பு

ரஜினிகாந்த் துவங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்று செய்திகள் வெளியாயின.இதையடுத்து முரசொலி மாறனின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் இதை மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் திரு ரஜினிகாந்த் அவர்களால் துவங்கப்படவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள திரு அர்ஜுனமூர்த்தி, எனது தந்தை மறைந்த திரு முரசொலி மாறன் அவர்களின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன.இது முற்றிலும் பொய்யான தகவல்.அது போன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை.இது போன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More News >>