சிட்னி காதல் ஜோடியின் சுவாரஸ்ய காதல் கதை..!

சிட்னியில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்தது. போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிந்த பிறகு இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் திடீரென `நான் உன்னை காதலிக்கிறேன்' என்று சொல்லி தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். இதை க்கேட்ட அந்தப் பெண் ஆச்சரியப்பட்டதுடன் நிற்காமல், உடனடியாக அந்த காதலை ஏற்றுக்கொண்டார். இதில் உற்சாகம் அடைந்த அந்த இளைஞர் இந்தப் பெண்ணை தவிட்டு கட்டிப்பிடித்து மகிழ்ந்தார்.

அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் இந்த திடீர் காதலை உற்சாகப்படுத்தினர். நேரலையில் படம்பிடித்துக் கொண்டிருந்த கேமரா இந்த காதலர்களின் பக்கமும் திரும்பியது. அந்த வீடியோ அடுத்த சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாந்து. ஒரு சில மணித் துளிகளில் மில்லியன் கணக்கான மக்களால் அந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் யார் என்பது தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் பெயர் தீபன் மாண்டலியா. காதலி பெயர் ரோஸ்.

சிட்னியில் இருந்து 2018 அக்டோபரில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்துள்ளார் தீபன். அவர் தங்கியிருந்த அவருக்கு முன் குடியிருந்துள்ளார் ரோஸ். இதனால் ரோஸ் பெயருக்கு அந்த வீட்டுக்கு தபால் வர அதை அவரிடம் நேரில் ஒப்படைக்கும் போது இருவரும் சந்தித்துள்ளனர். ரோஸ் குறித்த விவரங்களை பேஸ்புக்கில் அப்பார்ட்மென்ட் குடியிருப்பாளர்கள் பிரைவேட் குரூப்பில் இருந்து எடுத்து அவரை தொடர்புகொண்டுள்ளார் தீபன். இதன்பின் அவர்களின் நட்பு, காதலாக மாறியுள்ளது.

More News >>