சோளாப்பூரிக்கு ஏற்ற சுவையான சன்னா மசாலா ரெசிபி..! இனி வீட்டிலே செய்யலாம்..

ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா இனி நம்ப வீட்டிலே செய்து அசத்தலாம். குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தமான உணவு. வீட்டில் சோலா பூரி செய்தால் சன்னா மசாலாவையம் செய்து பாருங்கள். இரண்டும் சூப்பரான காம்பினேஷன். சரி வாங்க சன்னா மசாலாவை எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-வெள்ளை கொண்டைக் கடலை - 100 கிராம் தக்காளி - 1வெங்காயம் - 1சீரகம் - 1 ஸ்பூன்மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சன்னா மசாலா - 2 ஸ்பூன்மல்லித்தூள் - 1 ஸ்பூன்எண்ணெய் - தேவையான அளவுஉப்பு -தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:-முதலில் வெள்ளை கொண்டை கடலையை குக்கரில் வேக வைத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு சீரகம், வெங்காயம், தக்காளி ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

நன்கு வதங்கிய பிறகு வேக வைத்த கடலை, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், சன்னா மசாலா, மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து ஒரு 15 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வாசனைக்கு சிறிதளவு கொத்தமல்லி தழையை தூவி விட்டால் சுவையான சன்னா மசாலா தயார். இதனை சோலா பூரி, சப்பாத்தி, பரோட்டா ஆகியவைக்கு சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்..

More News >>