அசைவ பிரியர்களுக்கு கலக்கலான விருந்து.. பாட்டி வைத்த மீன் குழம்பு செய்வது எப்படி??

பழங்காலத்து உணவுகள் என்றாலே வாய்க்கு ருசியாக இருக்கும். அதுவும் அசைவம் என்றால் சொல்ல வார்த்தைகள் இல்லை. மீன் குழம்பு என்றாலே பாட்டி வைத்த மீன் குழம்பு தான் நினைவிற்கு வரும். சரி வாங்க எப்படி காரசாரமான மீன் குழம்பு செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-மீன்-120 கிராம்கொத்தமல்லி விதைகள்-40 கிராம்மிளகாய் வத்தல்-60 கிராம்தேங்காய் எண்ணெய்-தேவையான அளவுகடுகு -1 கிராம்வெங்காயம்-2கறிவேப்பிலை-சிறிது தேங்காய் பால்-தேவையான அளவுபுளி கரைசல் -தேவையான அளவுகொத்தமல்லி-சிறிதளவு

செய்முறை:-முதலில் குழம்புக்கு மசாலா செய்ய மிளகாய் வத்தல், கொத்தமல்லி விதைகள் போன்றவற்றை 3-4 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஊற வைத்த பொருள்களை நன்கு வேக வைத்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். கடாயில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.பச்சை வாசனை போனவுடன் குழம்பில் மீன் துண்டுகளை சேர்க்கவும்.

பிறகு தேங்காய் பால், புளிகரைசல் ஆகியவற்றை சேர்த்து மிதமாக சூட்டில் கொதிக்க வைக்கவும். கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். சுவையான, காரசாரமான பாட்டி வைத்த மீன் குழம்பு ரெடி...

More News >>