இந்தியாவுக்கு இரண்டாவது தங்கத்தைப் பெற்றுத் தந்தார் சஞ்சிதா!

காமன்வெல்த் போட்டிகள் 2018 வெகு விமர்சையாக நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் கராரா ஸ்டேடியத்தில் 21-ம் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டிகள் தொடங்கிய முதல் நாளிலேயே பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சனு தங்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தையே தங்கப்பதக்கமாகப் பெற்றுத் தந்து வேட்டையை துவக்கி வைத்தார்.

அதே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் குருராஜா பளுதூக்குதலில் இந்தியாவை அசைக்க முடியா உச்சத்தில் நிறுத்தினார். இதையடுத்து இன்று காலையில் நடந்த 53 கிலோ பிரிவிலான பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா சனு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்தியாவுக்கு இது இரண்டாவது தங்கப்பதக்கமும் ஒட்டுமொத்தத்தில் மூன்றாவது பதக்கமும் ஆகும். சஞ்சிதா கடந்த 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>