தமிழக மீனவர்கள் 30 பேர் இலங்கையில் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்கு நேற்று வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று மாலை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 5 விசைப்படகுகளையும் அதிலிருந்த 30 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர் .பிடிப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். அவர்கள் விடுவிக்கப்படுவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது இன்று தெரியவரும்.இந்நிலையில் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>