இலங்கையில் மீனவர்கள் சிறைபிடிப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. விசைப் படகுகளைக் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். இதன் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஒரு சில சிறிய விசைப்படகு மீனவர்கள் இன்று அனுமதி பெற்றுக்கொண்டு மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறைபிடிக்கப்பட்டு மீனவ குடும்பத்தினர் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

More News >>