பாலில் சுவையான கொழுக்கட்டை செய்வது எப்படி??

பாலில் எராளமான உணவு வகைகளை செய்ய்யலாம்.பால் தான் சில உணவுகளுக்கு மிகுந்த சுவை கொடுக்க காரணமாக இருக்கிறது. இனிப்பு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என எல்லோரையும் தன் பக்கம் இழுக்கும் திறமை கொண்டது. சர்க்கரை நோய் இருந்தாலும் அவர்களின் மனம் இனிப்பை தேடும். அப்படிப்பட்ட இனிப்பு வகைகளில் நாம் இன்றைக்கு செய்ய போவது பால் கொழுக்கட்டை.. சரி வாங்க எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:-அரிசி மாவு-1/2 கப் பால்-1/2 கப்தண்ணீர்-தேவையான அளவுசர்க்கரை-1/2 கப்நெய்-2 ஸ்பூன் ஏலக்காய் பொடி-2 கிராம்உப்பு-தேவையான அளவுகுங்குமப்பூ-சிறிது பிஸ்தா-5-6பாதாம்-5-6

செய்முறை:-முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் அரிசி மாவு, பால் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் மாவை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கட்டி உண்டாகாமல் கிளறி விட வேண்டும். 10 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும்.

மாவை நன்கு ஆறவைத்த பிறகு அதில் நெய்யை ஊற்றி சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.வேறு ஒரு பாத்திரத்தில் பாலில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்பு உருண்டிய மாவை பாலில் போட்டவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். 20 நிமிடத்தில் இனிப்பான பால் கொழுக்கட்டை தயார்.

More News >>